சிறிலங்காவிற்கு அவுஸ்திரேலியா 89 மில்லியன் நிதியுதவி!
சிறிலங்காவின் தெற்கில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 89 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை அவுஸ்திரேலிய அரசாங்கம், உலக உணவு வேலைத்திட்டம் மற்றும் யுனிசெவ் அமைப்பு ஆகியன இணைந்து சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளன. இயற்கை அனர்த்தத்திற்கு தயாராவதற்கும், உடனடியாக செயல்படுவதற்குமாக அந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த வேலைத்திட்டம் மூன்று வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான உடன்படிக்கை அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed